உடையாள் 10
19,தேடல் பிரபஞ்சம் மிகமிகப்பெரியது. அதற்கு முடிவே இல்லை. ஏனென்றால் முடிவு என இருந்தால் அதற்கு அப்பால் என்ன இருக்கும்? அதற்கு அப்பால் என்ன இருந்தாலும் அதுவும் பிரபஞ்சம்தான். பிரபஞ்சத்தின் மிகமிக தொலைவில் ஒரு கோள் இருந்தது. அதற்கு நீலப்பந்து என்று பெயர். அது பசுமையான காடுகளால் நிறைந்திருந்தது. அதில் ஏராளமான உயிரினங்கள் இருந்தன.விலங்குகள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள் எல்லாமே இருந்தன. அங்கே மனிதர்கள் வாழ்ந்தார்கள். அந்த உயிர்கள் எல்லாமே பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கே வந்து குடியேறியவை. அங்கிருந்த மனிதர்கள்தான் அவற்றை கொண்டுவந்தார்கள். அவர்கள் முன்பு சூரியன் என்ற நட்சத்திரத்தின் ஒரு கோளான பூமியில் வாழ்ந்தனர். பூமியில் அவர்கள் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார்கள். பூமியை துளையிட்டு அதன் உள்ளிருந்த கரியை வெளியே எடுத்து எரித்தனர். கார்பன்டையாக்சைட் வெளிவந்து பூமியை மூடியது. அதன் வெப்பம் அதிகரித்தது விளைவாக காடுகள் அழிந்தன. மக்கள் அங்கே வாழமுடியாமலாகியது. அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டனர். பெரிய போர்கள் நடந்தன. எளியவர்களை ஆற்றல்மிக்கவர்கள் அழித்தனர் அந்தப்போர்களில் எஞ்சியவர்கள் வேறு இ